2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்புக் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது. அதே வகையில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, கழகத்தில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் அமைப்பு ரீதியான சீரமைப்புகளை மாண்புமிகு கழகத் தலைவருக்கும் – தலைமைக்கும் பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பின்வருமாறு அமைக்கப்படுகிறது. இந்த ஒருங்கிணைப்புக்குழுவில் மாண்புமிகு கே.என்.நேரு திரு., ஆர்.எஸ்.பாரதி, மாண்புமிகு எ.வ.வேலு, மாண்புமிகு தங்கம் தென்னரசு, மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.