புழல் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 2124 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் விழா இன்று (ஜூலை 23) நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், முத்துச்சாமி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டார் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர்.
ப்போது அமைச்சர் உதயநிதி பேசியதாவது, மக்களுக்கு தி.மு.க. அரசு எப்போதும் துணை நிற்கும். மக்களும் தி.மு.க. அரசுக்கு துணை நிற்பார்கள் என்பதை பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40க்கு வெற்றி பெற செய்து நிரூபித்தீர்கள்.
இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த ஆடை இவை அவசியம். இதனை தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது. இதன் அவசியம் அறிந்து 1970-ல் கலைஞர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் தொடங்கினார். தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியமாக தரம் உயர்த்தி முதலமைச்சர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார் என பேசினார்.