Homeசெய்திகள்வேலை வாய்ப்புஅரசு தேர்வு எழுதிய இளைஞர்கள் கவனத்திற்கு - காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு முடிவுகள் வெளியீடு

அரசு தேர்வு எழுதிய இளைஞர்கள் கவனத்திற்கு – காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு முடிவுகள் வெளியீடு

-

தேர்வு எழுதிய இளைஞர்களின் கவனத்திற்கு – காலி பணியிடங்களை உடனே நிரப்பப்படும்.

நகராட்சி நிர்வாகத்தில் 2,676 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்;

சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகியவற்றில் பல்வேறு பதவிகளில் 2,676 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தால் கடந்த ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 6 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

எழுத்துத் தேர்வு மதிப்பெண்அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கான அழைப்புக் கடிதத்தை இணையதளத்தில் 26-ம் தேதி முதல் தேர்வர்கள் தங்களின் லாக்-இன் ஐடி பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ