Homeசெய்திகள்இந்தியாசீன லைட்டர் உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு தடை

சீன லைட்டர் உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு தடை

-

- Advertisement -

சீன லைட்டர் உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களால் தமிழகத்தின் சிவகாசி மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தியில் ஈடுபட்டும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் தங்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் சீன லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், சீனாவில் இருந்து லைட்டர்கள் உதிரி பாகங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு இன்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான இறக்குமதி சட்டவிதிகளில் திருத்தம் மேற்கொண்டு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பாக்கெட் லைட்டர்கள், கேஸ் நிரப்பிய லைட்டர்கள் மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாகவும், சீன இறக்குமதியை சார்ந்திருப்பதை தவிர்க்கும் பொருட்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது குறிப்பிட்டத்தக்கது.

MUST READ