Homeசெய்திகள்தமிழ்நாடுசர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு

சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு

-

- Advertisement -

சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

"அவர் பாராட்டி பேசியது இந்த தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
Photo: Chief Minister Of Tamilnadu

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மற்றும் பணியாளர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒதுக்கீட்டு உபரி உள்ள சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி – II ஆகிய இரு கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர் மற்றும் பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

கரும்பு

போனஸ் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் சுமார் 5,775 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ