- Advertisement -
தமிழ்நாட்டில், FL 2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் விதிகளின் படி செயல்படுகிறதா? என்பது குறித்து மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை, பதிவுத்துறை தரப்பில் ஆய்வு செய்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மனமகிழ் மன்றங்கள் விதிகளின் படி இயங்குவதை உறுதி செய்வது அரசின் கடமை. விதி முறைகளை மீறி செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறபித்துள்ளனர்.
பல மனமகிழ் மன்றங்களில் பொதுமக்களுக்கும் மது விற்பனை செய்யப்படுவதால், நாள் முழுவதும் செயல்படும் மதுக்கடையாக மனமகிழ் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன எனவே அவை ஆய்வுக்கு உட்படுத்தக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.