Homeசெய்திகள்இந்தியாஅரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என...

அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

-

- Advertisement -

அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர முன் அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்து அமலாக்கத்துறை மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!தெலுங்கானாவை சேர்ந்த வழக்கு ஒன்றில் அமலாக்கத் துறை உரிய அனுமதி பெறாமல் வழக்கு தொடர்ந்ததாக கூறி தெலுங்கானா உயர் நீதிமன்றம் அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்திருக்கிறது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய்.எஸ். ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு குற்றவியல் நடைமுறை சட்டம் 171ன் படி அரசு ஊழியர் மீது வழக்கு பதிவு செய்ய உரிய முன் அனுமதி பெறுவது அவசியமானது என்று தெரிவித்துள்ளனர்.

பின்னர் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ட்ரம்ப் வெற்றிபெற ஒவ்வொரு வாக்காளருக்கும் 47 டாலர்: வாரியிறைத்த எலான் மஸ்க்

MUST READ