- Advertisement -
பாஜகவில் இருந்து முழுவதுமாக விலகிவிட்டேன் என்று நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார். அக்கட்சியில் இருப்பதால், ஒரு பலனுமில்லை என கூறியுள்ளார்.
பிராமணர்கள் அல்ல யாருமே தமிழக பாஜகவை நம்புவது வீண் என்று சாடிய அவர், நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், ‘தமிழகத்தில் பிராமணர்களில் ஒரு சிலருக்கு சலுகைகள் கிடைக்கவில்லையே தவிர, இனப்படுகொலை நடக்கிறது என்று கூறுவது தவறு. தமிழக பாஜகவில்தான் பிராமணர்களுக்கு இனப்படுகொலை நடக்கிறது.
பிராமணர்களுக்கு நல்லது செய்யும் பட்சத்தில் வரும் தேர்தலில் திமுகவிற்கு பிரச்சாரம் செய்வேன் என்றார். சமீபகாலமாக, அண்ணாமலை மற்றும் அவரின் தலைமையும் விமர்சித்து வந்த நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.