Homeசெய்திகள்இந்தியாஅதானி முறைகேட்டில் குட்டு வெளிபட்டுவிடும் - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

அதானி முறைகேட்டில் குட்டு வெளிபட்டுவிடும் – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

-

- Advertisement -

அதானி முறைகேடு குறித்த உண்மை வெளிவந்துவிடும் என்பதால் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை அமைக்க பாஜக அரசு மறுக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அமெரிக்காவில் எப்சிபிஏ அமைப்பு அதானி நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. அமெரிக்க நீதிமன்றம் வழக்கை தனாக முன்வந்து எடுத்துள்ளது. பாஜக இது தொடர்பாக வாய் திறக்கவில்லை.
ஆந்திரா, ஜம்மூ காஷ்மீரில், ஒடிசா மாநிலங்களில் அதானி நிறுவனம் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதற்கான முதலீடு செய்துள்ளது என குற்றஞ்சாட்டினார்.

அதானி நிறுவனத்திக் முதலீடு செய்ய எல்.ஐ.சிக்கு நிதித்துறை உத்தரவிட்டதால் எல்.ஐ.சிக்கு 8700 கோடி ரூபாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதானியின் பங்குகளை வாங்க துணை போன செபியின் தலைவரை இதுவரை விசாரணைக்கு அழைக்கவில்லை. செபி தலைவர் மாதவியை பாஜக அரசு ஏன் பாதுகாக்கிறது என கேள்வியெழுப்பினார். சற்று நேரத்திற்கு முன்பாக கென்யா தலைநகர் நைரோபியில் அதானியின் விமானத்தை சிறை பிடித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

அதானி முறைகேடு குறித்த உண்மை வெளிவந்துவிடும் என்பதால் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை அமைக்க பாஜக அரசு மறுக்கிறது. அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கம் குறித்து சட்டப்பேரவையில் எழுப்புவோம். கடந்த அதிமுக ஆட்சியில் அதானியின் கிரீன் எனர்ஜி ராமநாதபுரத்தில் மூதலீடு செய்தது என அவர் கூறியுள்ளார்.

ரூ.2500 கோடி லஞ்சம் கேட்ட அதானி – மாணிக்கம் தாகூர் பேட்டி

MUST READ