Homeசெய்திகள்சினிமா'சூர்யா 45' படப்பிடிப்பு இந்த தேதியில் தான் தொடங்குகிறதா?

‘சூர்யா 45’ படப்பிடிப்பு இந்த தேதியில் தான் தொடங்குகிறதா?

-

- Advertisement -

சூர்யா 45 படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் சமீபத்தில் கங்குவா எனும் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா, தனது 45வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். 'சூர்யா 45' படப்பிடிப்பு இந்த தேதியில் தான் தொடங்குகிறதா?இந்த படத்தினை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரபல நடிகரும் இயக்குனருமான ஆர் ஜே பாலாஜி இந்த படத்தை இயக்கப் போகிறார். ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைக்க உள்ளார். சூர்யா 45 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படமானது கிராமத்து கதைக்களத்தில் பேண்டஸி படமாக உருவாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகளும் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. அதாவது கடந்த சில தினங்களாக சூர்யா 45 படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிகை திரிஷா நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சூர்யா மற்றும் திரிஷா ஆகிய இருவரும் இணைந்து மௌனம் பேசியதே, ஆறு போன்ற படங்களில் நடித்திருக்கிறார்கள். 'சூர்யா 45' படப்பிடிப்பு இந்த தேதியில் தான் தொடங்குகிறதா?எனவே மீண்டும் இந்த கூட்டணியி இணைய இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டி உள்ளது. இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது? தொடங்கும் என்ற கேள்வி உலாவரும் நிலையில் ஆர்.ஜே. பாலாஜி தற்போது சொர்க்கவாசல் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பிஸியாக இருப்பதன் காரணமாக சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு சொர்க்கவாசல் படத்தின் ரிலீஸுக்கு மறுநாள் நவம்பர் 30ஆம் தேதி தொடங்க படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ