Homeசெய்திகள்க்ரைம்அரசு மருத்துவமனை கழிவறையில் ரகசிய கேமரா...சிக்கிய மருத்துவர்

அரசு மருத்துவமனை கழிவறையில் ரகசிய கேமரா…சிக்கிய மருத்துவர்

-

- Advertisement -

அரசு மருத்துவமனை கழிவறையில் ரகசிய கேமரா...சிக்கிய மருத்துவர்

பொள்ளாச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் பேனா வடிவிலான ரகசிய கேமரா வைத்த பயிற்சி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

பொள்ளாச்சி உடுமலை சாலையில் அமைந்துள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களும், செவிலியர்களும், பயிற்சி மருத்துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் துறை வாரியாக பணியாற்றி வருகின்றனர்.

மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் செவிலியர் பயன்படுத்தும் கழிவறை தனியாக உள்ளது. இந்த நிலையில் நேற்று கழிவறைக்கு சென்ற பெண் செவிலியர் ஒருவர் கழிவறையில் பேனா வடிவிலான கேமரா ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜாவிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா, கழிவறையில் ரகசிய கேமராவை வைத்தது யார் என்று விசாரணை மேற்கொண்டதில், மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதி சேர்ந்த பயிற்சி மருத்துவர் வெங்கடேஷ்(33) என்பவர் கழிவறையில் ரகசியமாக பேனா வடிவிலான கேமராவை வைத்தது தெரிய வந்தது.

இதைதொடர்ந்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பயிற்சி மருத்துவர் வெங்கடேஷ் மீது புகார் அளித்தார். புகார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பயிற்சி மருத்துவர் வெங்கடேசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கைது செய்யப்பட்ட பயிற்சி மருத்துவர் வெங்கடேஷ் கோவையில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்ததும், பொள்ளாச்சி மருத்துவமனையில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி முதல் பணியில் சேர்ந்து பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் கைது செய்யப்பட்டுள்ள வெங்கடேஷ் மற்ற மருத்துவமனையில் இதுபோன்று வேற ஏதாவது பகுதியில் போன்ற கேமராக்கள் வைத்து இருப்பாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிராவில் முதல்வர் யார்? சஸ்பென்ஸ்..!! டிசம்பர் 5ல் பதவி ஏற்பு

MUST READ