Homeசெய்திகள்தமிழ்நாடுநயன்தாரா ஆவணப்படத்திற்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணை ஜன.22க்கு ஒத்திவைப்பு!

நயன்தாரா ஆவணப்படத்திற்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணை ஜன.22க்கு ஒத்திவைப்பு!

-

- Advertisement -

நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால்தான் நயன்தாராவிற்கு ஆதரவு கொடுத்தேன்..... நடிகை பார்வதி பேட்டி!

திருமண ஆவண படத்துக்கு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன் படுத்தியதாக தனுஷ் சார்பில் ரூ.10 கோடி இழப்பீடு வழங்க கோரி நடிகை நயன்தாராவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

சிபிஐக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நெட் பிலிக்ஸ் நிறுவனம் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை அடுத்து, இந்த வழக்கின் இறுதி விசாரணையை வரும் ஜனவரி 22ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

MUST READ