- Advertisement -
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வலியுறுத்தல். அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கு
ஆறு புகார்கள் வந்துள்ளதால் அனைத்தையும் சேர்த்து விசாரணைக்கு எடுக்கபட்டுள்ளது – தேர்தல் ஆணையம் பதில்
முழு பின்னணி விவரங்களை தெரிவிக்காமல், யூகத்தின் அடிப்படையில், அதிமுக மனுவை முன்கூட்டியே தாக்கல் செய்துள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல – தேர்தல் ஆணையம். வழக்கின் விசாரணை பிப்ரவரி 6 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு