Homeசெய்திகள்தமிழ்நாடுமுகத்தை எங்கே வைத்துக் கொள்வார் எடப்பாடி பழனிசாமி? - அமைச்சர் எஸ்.ரகுபதி விமர்சனம்!

முகத்தை எங்கே வைத்துக் கொள்வார் எடப்பாடி பழனிசாமி? – அமைச்சர் எஸ்.ரகுபதி விமர்சனம்!

-

- Advertisement -

ஈசிஆர் விவகாரத்தில் கைதான முக்கிய குற்றவாளி சந்துரு அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், இந்த விவகாரத்தில் திமுக மீது பொய்பழி போட்ட எதிர்க்கட்சிகள் இப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டுபோய் வைத்துக் கொள்வார்கள்? என்றும் அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:- திமுக ஆட்சியின் நலத்திட்டங்களால் மகளிர் முன்னேறுவதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் திமுக அரசின் மீது பழிபோட முயற்சிப்பதும் சில நாட்களிலேயே உண்மை தெரியவந்து அந்த முயற்சி தோல்வியடைவதும் வாடிக்கையாகிவிட்டது.

அந்த வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் பயணித்த காரை வழிமறித்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட சந்துரு என்ற முக்கிய குற்றவாளி அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர் என தனது பின்புலத்தை அவரே ஒப்புக்கொள்ளும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி வைரலாகியிருக்கிறது. திமுக கொடியைக்காட்டி திமுக மீது பொய்யான வீண்பழி சுமத்தி அதன் மூலம் சுயநல அரசியல் செய்ய நினைத்தவர்களின் முகமூடி கிழிந்து தொங்குகிறது.

பெண்கள் மீதான பாலியல் தாக்குதல், போக்ஸோ குற்றங்கள் என அதிமுகவை சேர்ந்தவர்களும் அவர்களது குடும்பத்தினரும்தான் பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது ஒவ்வொரு குற்றச்செயலின் பின்புலத்தையும் ஆராய்ந்தால் தெரிய வருகிறது. திமுக மீது பொய்பழி போட்ட எதிர்க்கட்சிகள் இப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள்? வீராவேசமாக அறிக்கைவிட்ட பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா?, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ