கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே எட்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை – போக்சோ சட்டத்தில் மூன்று ஆசிரியர்கள் கைது – பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மகாதேவ கொல்ல அள்ளி அரசு நடுநிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை. கடந்த ஒரு மாதமாக மாணவி பள்ளிக்கு வராத நிலையில் தலைமை ஆசிரியர் மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியதில் மாணவி கர்ப்பம் அடைந்து கருக்கலைப்பு செய்தது இருப்பது தெரிய வந்தது.
இந்நிலையில் பள்ளி மாணவி புகாரை அடுத்து அதே பள்ளியை சார்ந்த ஆசிரியர்கள் சின்னசாமி 57, ஆறுமுகம் 37, பிரகாஷ் 37, ஆகிய மூன்று பேர் போக்சோ சட்டத்தில் கைது. பருகூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவர் பரிசோதனை செய்தனர். மாணவிகள் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளி மாணவி பாலியல் புகாரில் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள மூன்று ஆசிரியர்களையும் பணியிட நீக்கம் செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் உத்தரவு.