Homeசெய்திகள்அரசியல்தலைநகரில் தலைநிமிர்ந்த பாஜக.. துடைத்தெறியப்பட்ட காங்கிரஸ்.. ! ஹெச்.ராஜா கொக்கரிப்பு..!

தலைநகரில் தலைநிமிர்ந்த பாஜக.. துடைத்தெறியப்பட்ட காங்கிரஸ்.. ! ஹெச்.ராஜா கொக்கரிப்பு..!

-

- Advertisement -

டெல்லி சட்டமன்ற வாக்கு எண்ணிக்கையில்  தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருவதை கொண்டாடும் விதமாக கோவை பாஜக தலைமை அலுவலகத்தில் எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கினர்.தலைநகரில் தலைநிமிர்ந்த பாஜக.. துடைத்தெறியப்பட்ட காங்கிரஸ்.. ! ஹெச்.ராஜா கொக்கரிப்பு..!

டெல்லி சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வந்ததை கொண்டாடும் விதமாக  கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக கட்சி அலுவலகம் முன்பு  அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில்  அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது  செய்தியாளரிடம் பேசிய எச்.ராஜா பேசுகையில்  –

“தலைநகர் டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. பாராளுமன்ற தேர்தல்களில் பா.ஜ.க தொடர் வெற்றிகளை பெற்ற போதும், சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று வந்தது.  இந்த ஆண்டு தேர்தல் பணிக்காக டெல்லி சென்றிருந்தேன். முந்தைய தேர்தல் காலங்களில் குழந்தைகள் கூட கையில் ஆம் ஆத்மி கட்சியின் சின்னமான தொடப்பத்தோடு இருப்பார்கள். அந்த அளவிற்கு அந்த கட்சி பிரபலமாக இருந்தது. இந்த முறை அந்த பிரபலத்தை பார்க்க முடியவில்லை. எனவே, இந்த தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடையும் என நான் தெரிவித்து இருந்தேன்.தலைநகரில் தலைநிமிர்ந்த பாஜக.. துடைத்தெறியப்பட்ட காங்கிரஸ்.. ! ஹெச்.ராஜா கொக்கரிப்பு..!1993 ஆம் ஆண்டு பா.ஜ.க 43 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி அடைந்து இருந்தது. இன்று 48 சதவீதம் பெற்றுள்ளது. இந்த மாற்றத்திற்கு காரணம், இந்த வெற்றிக்கு காரணம், பிரதமர் மோடி அரசின் திட்டங்கள் மக்கள் மனதை தொட்டு உள்ளது என்பது தான். மேலும் ஆம் ஆத்மி ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஊழல்கள், அரவிந்த் கெஜ்ரிவால் மிகவும் மோசமாக பேசிய கருத்துக்கள் ஆகியவற்றை மக்கள் ரசிக்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. குறிப்பாக ஹரியானா அரசு யமுனா நதியில் விஷம் கலந்ததாகவும் டெல்லி மக்களை இனப்படுகொலை செய்ய முயன்றதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதை மக்கள் ரசிக்கவில்லை.

கட்சி ஆரம்ப கட்டத்தில் ஆரம்பித்த போது மிகவும் எளிமையாக இருந்தவர்கள் இன்று ஊழல் செய்து ஆடம்பரமாக உள்ளனர். குறிப்பாக கெஜ்ரிவாலின் வீட்டு கழிவறையில் தங்க பிளேட் வைக்கும் அளவிற்கு ஊழல் செய்துள்ளார். சாராய எக்ஸ்சைஸ் டூட்டி ஊழல் நிரூபிக்கப்பட்டு உள்ளது.  வாக்கு இயந்திர கோளாறு, ரைடு, கைது என ஆம் ஆத்மிக்கு ஆதரவாக இப்போது சிலர் பேசலாம். சாராய ஊழலை முதலில் முன் வைத்தது காங்கிரஸ் தான். அதை தொடர்ந்து தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதில் பா.ஜ.க விற்கு எந்த சம்பந்தமும் இல்லை.தலைநகரில் தலைநிமிர்ந்த பாஜக.. துடைத்தெறியப்பட்ட காங்கிரஸ்.. ! ஹெச்.ராஜா கொக்கரிப்பு..!

மேலும், ஜீரோ எம் எல் ஏ என்பதை ஹாட்ரிக்காக வாங்கிய ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேச துரோகியாக மாறி கருத்துக்களை தெரிவித்து வந்த காங்கிரஸ் கட்சி துடைத்து  எரியப்பட்டு உள்ளது. அரசியல் தலைவர்கள் இப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு தமிழ்நாட்டின் திராவிட தலைவர்கள் உட்பட பலர் உதாரணமாக இருந்தாலும், கெஜ்ரிவால் அதில் முதன்மையானவர். அவரை தோற்கடிக்க வேண்டும் என்கிற திடமான முடிவை டெல்லி மக்கள் எடுத்துள்ளனர். இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும் டெல்லியில் உள்ள தமிழர் என்கிலேவ் பகுதியில் நானும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையும் சென்றபோது, அங்கு உள்ள தமிழர்கள் மத்தியிலும் பா.ஜ.க விற்கு ஆதரவு அதிகரித்து உள்ளது என்பதை நேரில் பார்க்க முடிந்தது” என தெரிவித்தார்.  1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 – ஆம் தேதி கோவையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை எதிர்த்து ஆண்டுதோறும் பா.ஜ.க சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்த பா.ஜ.க முடிவு செய்து உள்ளது என்பதையும் எச். ராஜா தெரிவித்தார்.தலைநகரில் தலைநிமிர்ந்த பாஜக.. துடைத்தெறியப்பட்ட காங்கிரஸ்.. ! ஹெச்.ராஜா கொக்கரிப்பு..!

மேலும் பேசியவர், “இடைத்தேர்தலில் பொதுவாக ஆளும் கட்சி தான் ஜெயிக்கும். திருமங்கலம் ஃபார்முலா என்ற ஒன்றைக் கொண்டு வந்து தி.மு.க அப்போது இடைத் தேர்தலில் ஜெயித்தாலும், பொது தேர்தலில் தோல்வி அடைந்தது. ஈரோடு இடைத்தேர்தலில் பிரதான கட்சிகள் போட்டியில் இல்லை என்றாலும் பணத்தை வழங்கி, பட்டியில் மக்களை அடைத்து திமுக ஜெயித்து உள்ளது. இதை பெரும் வெற்றியாக தி.மு.க கருத முடியாது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி என்பது குறிப்பிட்ட மாவட்டத்திற்குள் அடங்கும் கட்சியாகும், தேசிய அரசியல் குறித்து அவர்கள் பேசும் கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. பட்ஜெட்டில் உரிய நிதி வழங்கப்படவில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறுவது அப்பட்டமான பொய்யாகும். பட்ஜெட்டில் வழங்கப்பட்டு உள்ள திட்டங்கள் குறித்து பா.ஜ.க நிர்வாகிகள் அனைவரும் மக்களிடம் எடுத்து சென்று வருகிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. தினம்தோறும் பல பாலியல் வழக்குகள் பதிவாகிறது, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுகிறது, இதை எல்லாம் மறைப்பதற்காகவே மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் வீணாக பணி சுமத்துகிறார்.தலைநகரில் தலைநிமிர்ந்த பாஜக.. துடைத்தெறியப்பட்ட காங்கிரஸ்.. ! ஹெச்.ராஜா கொக்கரிப்பு..!

காவல்துறை ஏ.டி.ஜி.பி கல்பனா சீருடை தேர்வில் நடைபெற்ற முறைகேடு குறித்து கூறியதற்காக எரிக்கப்பட்டு கொலை செய்யும் முயற்சி நடந்ததாக தெரிவித்து உள்ளார். காவல் துறையை கையில் வைத்து இருக்கும் முதல்வருக்கு இதைவிட அவமானம் வேறு எதுவும் இல்லை. நான் முதல்வராக இருந்து இருந்தால் பதவியை இதற்காக ராஜினாமா செய்து இருப்பேன்.  2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் ஆட்சி அமையும். கூட்டணி குறித்து மேலிடம் முடிவு செய்து அறிவிக்கும்.தலைநகரில் தலைநிமிர்ந்த பாஜக.. துடைத்தெறியப்பட்ட காங்கிரஸ்.. ! ஹெச்.ராஜா கொக்கரிப்பு..!

திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பொறுத்த வரை அங்கு தர்கா இல்லை என தமிழக அரசின் சுற்றுலாத் துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ள தகவல் கையேட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிக்கந்தரின் கல்லறை கோரிப்பாளையத்தில் உள்ளதாக அதில் கூறப்பட்டு உள்ளது.  விஜயநகரப் பேரரசு மன்னர் படையெடுத்த போது அவரிடம் தப்பிப்பதற்காக மலை ஏறிய சிக்கந்தர் கொல்லப்பட்டார் எனும் வரலாறு, மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நாவலில் குறிப்பிட்டு உள்ளார். மேலும் 1915 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை திருப்பரங்குன்றம் மலையில் தர்கா விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் குறித்து பல்வேறு தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கி உள்ளது.

தி.மு.க கூட்டணி எம்பிகள் அங்கு சென்று உயர் பலி கொடுத்த போது தான் பிரச்சனை தீவிரமானது. இந்து கோவில்களில் உயிர் பலி கொடுத்து வழிபாடு செய்யும் நடைமுறையும் உள்ளது. ஆனால் முருகன் மற்றும் சிவன் ஆலயங்களில் உயிர் பலி கொடுப்பதில்லை. திருப்பரங்குன்றம் மலையின் அடிவாரத்தில் முருகன் கோயில், மேலே சிவன் கோவில் உள்ளது. அங்கு உயிர்பலி கொடுக்கக் கூடாது என்பதை தான் உயிர்பலி கொடுத்து வழிபடும் இந்துக்களே முன் வைக்கின்றனர்.

அவர்கள் பிரச்சனை செய்த பின்பு தான் காடேஸ்வராசுப்ரமணியம் உள்ளிட்டோர் அங்கு செல்கின்றனர். அவர்களை வெளியூர் ஆட்கள் எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லா இடங்களிலும் இந்து கோவில்களை முஸ்லிம்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். ஆனால் எந்த ஒரு மசூதியையோ, சர்ச்சையோ இடித்து இந்து கோவில் கட்டப்பட்டதாக இல்லை. எனவே இவர்கள் எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை பின்பற்றி இந்து மதத்தினரின் உணர்வுகளை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்.மேலும், தி.மு.க வில் தற்போது இருப்பவர்கள் அனைவரும் அ.தி.மு.க வில் இருந்து வந்தவர்கள் தான் அவர்களின் கைகள் தான் தி.மு.க வில் தற்போது ஓங்கி உள்ளதாக தி.மு.க வினர் சிலரை கூறி வருகின்றனர்” என எச்.ராஜா தெரிவித்தார்.

‘பெரியார் வாழ்க…’ விண்ணதிர முழக்கமிட்டு திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டம்..!

MUST READ