Homeசெய்திகள்சினிமா'ஜெயிலர் 2'-க்கு பிறகு நெல்சனின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோவா?

‘ஜெயிலர் 2’-க்கு பிறகு நெல்சனின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோவா?

-

- Advertisement -

ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.'ஜெயிலர் 2'-க்கு பிறகு நெல்சனின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோவா?

நெல்சன் திலீப் குமார் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களின் ஒருவர் ஆவார். அந்த வகையில் இவர், நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார். அடுத்தது இவர் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் இழந்த அந்த வெற்றியை ரஜினியின் ஜெயிலர் படத்தின் மூலம் இரண்டு மடங்காக திரும்பப் பெற்றார். அதன்படி இந்த படம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூலிலும் இமாலய சாதனை படைத்தது. எனவே இதைத்தொடர்ந்து ரஜினி, நெல்சன், அனிருத் கூட்டணியில் ஜெயிலர் 2 திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்த படம் தொடர்பான ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி இணையத்தை கலக்கியது. எனவே இதற்குப் பிறகு நெல்சன் இயக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 'ஜெயிலர் 2'-க்கு பிறகு நெல்சனின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோவா?அதாவது இயக்குனர் நெல்சன், ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு பான் இந்தியா ஸ்டாரான ஜூனியர் என்டிஆர்- ஐ வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க போவதாகவும் தகவல் கசிந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்காக இயக்குனர்களின் நெல்சன் ரூ. 50 கோடி அட்வான்ஸ் வாங்கியுள்ளதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் நெல்சன், ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் உருவாகும் புதிய படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ