- Advertisement -
தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் தமிழகத்திற்கு நிதி வழங்காதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்பாட்டம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.
மேலும் இது குறித்து கூறியிருப்பதாவது, ”தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் தமிழகத்திற்கு நிதி வழங்காததை கண்டித்து காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. 28 ம் தேதி சென்னை வரும் தர்மேந்திர பிரதானை கறுப்புக் கொடியுடன் முற்றுகையிடப் போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் ரூ.2,152 கோடி நிதி வழங்குவோம் என கூறுவது கண்டனத்துக்குரியது” என்று கூறியுள்ளாா்.