ரஜினி, அல்லு அர்ஜுன், சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம் உருவாகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வேட்டையன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து நடிகர் ரஜினி கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதிக்குள் நிறைவடைந்துவிடும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இவர் அட்லீ இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. அதன்படி ஜவான் படத்திற்கு பிறகு அட்லீ சல்மான் கானை இயக்கப் போவதாக தகவல் வெளியான நிலையில் அப்படம் கைவிடப்பட்டதாகவும், பின்னர் அல்லு அர்ஜுன் நடிப்பில் புதிய படம் ஒன்றை அட்லீ இயக்கப் போவதாகவும் தகவல் பரவி வருகிறது. எனவே அட்லீ, அல்லு அர்ஜுன் கூட்டனியில் உருவாகும் புதிய படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க போவதாகவும் இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகப் போவதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்பது போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளன. மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர் ரஜினியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இயக்குனர் அட்லீயும், ரஜினியுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புதல் பெற்று விட்டதாகவும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் நடிகர் ரஜினி கூலி, ஜெயிலர் 2 ஆகிய படங்களில் முடித்த பின்னர் தான் இந்த படத்தில் இணைவதாக கூறியுள்ளாராம். இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்தாலும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.