‘வாயில் ராமர், அக்குளில் கத்தி…’ என்கிற பழமொழி பிரபலமானது. சவுதி அரேபியாவில் ரஷ்யாவுடன் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதேவேளையில் ரஷ்யாவில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது உக்ரைன்.
ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான போர் அமைதிப் பேச்சுவார்த்தைகள் சவுதி அரேபியாவில் தொடங்க உள்ளன. இதற்காக ஜெலென்ஸ்கி, அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ, ரஷ்ய அதிகாரிகள் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளனர். அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பே, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் ட்ரோன் இராணுவம் ரஷ்யாவை உலுக்கியுள்ளது. சற்று முன், உக்ரைன் ரஷ்யா மீது மீது ஒரு பெரிய தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ரஷ்யாவில் ஒரே நேரத்தில் 70 ட்ரோன்கள் ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவில் சுமார் ஒரு மணி நேரம் உக்ரைன் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்களில் பல குடியிருப்பு கட்டிடங்கள் குறி வைக்கப்பட்டுள்ளன. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு அருகிலுள்ள நகரங்களிலும் பல தாக்குதல்கள் நடந்துள்ளன. கொலோம்னா, டோமோடெடோவோவில் பல தாக்குதல்கள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு, பேச்சுவார்த்தைக்கு முன்னர் ஜெலென்ஸ்கியின் நோக்கங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
ரஷ்ய வான் பாதுகாப்பு இதுவரை சுமார் 58 ட்ரோன்களை அழித்துள்ளது. உக்ரைனில் தாக்குதல்கள் தொடர்கின்றன. இந்த தாக்குதல்களால் மாஸ்கோ விமான நிலையம் மூடப்பட்டு பல விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த தாக்குதல் ஜெட்டாவில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கலாம்.
ரஷ்யப் போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. அமெரிக்க, உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகள் இன்று சவுதி அரேபியாவில் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பில் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைதி குறித்து விவாதிக்க அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகள் முன்பு சந்தித்துள்ளனர்’ ஆனால் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியே சவுதி அரேபியாவில் இருப்பதால் இந்த உரையாடல் தீர்க்கமானதாகக் கருதப்படுகிறது.
உக்ரைன் ஜனாதிபதி இன்று சவுதி அரேபியாவை சென்றுள்ளார். அவரை முகமது பின் சல்மான் வரவேற்றார். ஜெட்டாவுக்குச் செல்வதற்கு முன், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் சவுதி அரேபிய அரசின் முயற்சிகளுக்கு ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார்.