Homeசெய்திகள்தமிழ்நாடு806 கோடியே 22 லட்சம் ரூபாய் இழப்பீடு குறித்து தமிழக அரசு விளக்கம் – விசாரணையை...

806 கோடியே 22 லட்சம் ரூபாய் இழப்பீடு குறித்து தமிழக அரசு விளக்கம் – விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்

-

- Advertisement -

தமிழகத்தில் அரசு திட்டங்களுக்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடாக 806 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.806 கோடியே 22 லட்சம் ரூபாய் இழப்பீடு குறித்து தமிழக அரசு விளக்கம் – விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்ராணிப்பேட்டையில் பெல் நிறுவன ஆலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சேட்டு, சந்திரசேகர் ஆகியோர் 2017ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில், உயர் நீதிமன்ற பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் ஆயிரத்து 521 கோடியே 83 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி ஆயிரத்து 222 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக வருவாய் துறை செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில், 2024ம் ஆண்டு டிசம்பர் வரை 806 கோடியே 22 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டியுள்ளதாகவும், இந்த இழப்பீடுகளை வழங்கும்படி பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி 1,303 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகைகளை விரைந்து வழங்க ஏதுவாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நிலுவை இழப்பீட்டு தொகையை வழங்குவது குறித்து அதிகாரிகள் கூட்டத்தை கூட்டியுள்ளதாகவும் அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்வதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்திருந்தாா்.இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 28ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் திடீர் சர்ப்ரைஸ் விசிட் அடித்த அமைச்சர்

MUST READ