Homeசெய்திகள்தமிழ்நாடுசட்டம், ஒழுங்கு ஏ.டி‌.ஜி.பி விடிய விடிய சோதனை

சட்டம், ஒழுங்கு ஏ.டி‌.ஜி.பி விடிய விடிய சோதனை

-

- Advertisement -
சட்டம், ஒழுங்கு ஏ.டி‌.ஜி.பி விடிய விடிய சோதனை
தமிழ்நாட்டில் போதை பொருள் கடத்தலை தடுக்க மாநில எல்லைகளில் காவல்துறை உயர் அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர்.

சட்டம், ஒழுங்கு ஏ.டி‌.ஜி.பி விடிய விடிய சோதனை

கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் உள்ள சோதனை சாவடிகளுக்கு அதிரடியாக சென்ற தமிழ்நாடு காவல்துறை சட்டம், ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி சங்கர் மற்றும் வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன் ஆகியோர் சோதனை நடத்தினர்.

குறிப்பாக கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுவதை ஆய்வு செய்து அவர்கள் சோதனை சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை முறைகளை பார்வையிட்டனர். தொடர்ந்து காட்பாடி, சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள இரவு நேர சோதனை சாவடிகள் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் வாகன சோதனை முறை குறித்து கேட்டறிந்தனர்.

வேலூர் கிரீன் சர்கிள் பகுதியில் ஆய்வு நடத்திய கூடுதல் டிஜிபி சங்கர் அந்த வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டார். முன்னதாக வேலூரில் 6 இடங்களில் நிரந்தர வாகன சோதனை சாவடிகள் அமைத்து கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை கூடுதல் டிஜிபி சங்கர் வெகுவாக பாராட்டினார்.

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கஞ்சா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் மாநிலத்தில் கஞ்சா பயன்பாடு குறைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனையின் போது வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

MUST READ