Homeசெய்திகள்சென்னைநடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு தூக்கம்! போதை இளைஞரை எழுப்ப படாத பாடுபட்ட போலீஸ்

நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு தூக்கம்! போதை இளைஞரை எழுப்ப படாத பாடுபட்ட போலீஸ்

-

நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு தூக்கம்! போதை இளைஞரை எழுப்ப படாத பாடுபட்ட போலீஸ்

நான் டிரிங்கன் டிரைவ் (drink and drive)கிடையாது நான் டிரைவ் அண்ட் ட்ரிங்க்(drive and drink) என்று போலீசாருக்கே புதிய சட்டம் சொல்லிக் கொடுத்த  இளைஞர்.

சென்னை புதுப்பேட்டை சாலையில் தனது காரை ஆனில் இருப்பது கூட தெரியாமல் காருக்குள் அதிக போதையில் மல்லாந்து உறங்கிய இளைஞர். அதை பார்த்து சென்ற வாகன ஓட்டிகள் அந்த போதை இளைஞர் காரை சுற்றி கூட்டம் கூடியதால் அந்த இடம் சற்று பரபரப்பு ஆனது.

நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு தூக்கம்
இளைஞர்

அதன் பின் போலீசார் காருக்குள் இருந்த அந்த போதை இளைஞரை எழுப்ப பல்வேறு  முயற்சிகளை செய்தனர் போதையில் இருந்த இளைஞரை எழுப்ப முடியாமல் தவித்த நிலையில் பெரும் பாடுபட்டு எழுப்பினர் .

நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு தூக்கம்! போதை இளைஞரை எழுப்ப படாத பாடுபட்ட போலீஸ்
நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு தூக்கம்

அதன்பின் காரில் இருந்து வெளியே வந்த இளைஞரிடம்  போலீசார் அவர் மது அருந்தி உள்ளாரா என்று ப்ரீத் அனலைசரில் ஓத சொல்லியும் அவர் ஊத மறுத்து விட்டார் போலீசார் அந்த இளைஞர் மீது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும்                 ( obstruction) வழக்கு பதியப்பட்டது. ஆனால் அந்த இளைஞர் மது போதையில் உள்ளார் என்பதற்கான பரிசோதனை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ