Homeசெய்திகள்க்ரைம்காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சென்ற காதலனுக்கு நேர்ந்த கதி

காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சென்ற காதலனுக்கு நேர்ந்த கதி

-

காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சென்ற காதலனுக்கு நேர்ந்த கதி
அடித்துக்கொலை

காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சென்ற காதலனை பெண்ணின் உறவினர் வெட்டி படுகொலை செய்து விட, அந்த இளம் பெண் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சிக்க, அதில் உயிர் பிழைத்து விட, பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். கோவை சுந்தராபுரம் பகுதியில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம் .

சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் பிரசாந்த், செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் தன்யாவை காதலித்து வந்திருக்கிறார். கடந்த ஐந்தாம் தேதி அன்று தன்யாவுக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து சொல்ல அவர் தன்யா வீட்டிற்கு சென்று இருக்கிறார் பிரசாந்த். அப்போது பிரசாந்த் மது போதையில் இருந்ததால் அவருக்கும் தன்யாவின் மாமனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது தகராறாக மாறி இருக்கிறது. இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தன்யாவின் மாமா விக்னேஷ், பிரசாந்த்தை வெட்டி படுகொலை செய்திருக்கிறார் .

தன்முன்னே காதலன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருந்த தன்யா, மறுநாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அவரை குடும்பத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்க, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததை அடுத்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார் .

வீட்டிற்கு வந்த தன்யா பிரசாந்த் நினைப்பால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் . தன் முன்னேயே துடிதுடித்து உயிரை விட்ட காதலனை மறந்து அவரால் இருக்க முடியவில்லை. மன உளைச்சல் அதிகமாகி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

சம்பவம் குறித்து அறிந்த செட்டிபாளையம் போலீசார் நேரில் வந்து தன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தன்யாவின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சென்ற காதலனுக்கு நேர்ந்த கதி
ஜோடிகள்

காதலனை வெட்டி படுகொலை செய்த சம்பவமும் அதைத் தொடர்ந்து காதலி விஷம் குடித்து அதில் உயிர் பிழைத்து மீண்டும் விடாப்பிடியாக இருந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் கோவை சுந்தராபுரம் பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

MUST READ