
அஞ்சலகங்களில் குறிப்பிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு அமல்!
ஐந்து ஆண்டு முதலீட்டு காலம் கொண்ட ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி 0.3% அதிகரிக்கப்பட்டு 6.5% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அஞ்சலங்களில் செய்யப்படும் ஓராண்டு, ஈராண்டு பிக்ஸ்டு டெபாசிட்களுக்கு வட்டி 0.1% அதிகரிக்கப்பட்டு, 7% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜூலை முதல் செப்டம்பர் மாதங்கள் வரையிலான காலாண்டுக்கு புதிய வட்டி விகிதங்கள் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், செல்வமகள் சேமிப்புத் திட்டத்திற்கு வட்டி 8% ஆகவும், பிபிஎஃப் சேமிப்பிற்கு வட்டி 7.1% ஆகவும், மூத்த குடிமக்களுக்கான சிறுசேமிப்புத் திட்டத்திற்கு வட்டி 8.2% ஆகவும், கிசான் விகாஸ் பத்திரத்திற்கு வட்டி 7.5% ஆகவும் தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.
பேருந்து தீப்பிடித்த விபத்தில் 25 பயணிகள் உடல் கருகி உயிரிழப்பு!
இதேபோல், மற்ற சிறுசேமிப்புத் திட்டங்களுக்கும் பழைய வட்டியே தொடரும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.