Homeசெய்திகள்தமிழ்நாடு"நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு"- வானிலை ஆய்வு மையம் தகவல்!

“நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

-

 

கனமழை காரணமாக, நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!
File Photo

வானிலை நிலவரம் குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஜூலை 7, 8, 9 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் இன்றும் (ஜூலை 05) பெய்ய வாய்ப்புள்ளது.

திருவள்ளூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும்.

சிதம்பரம் அருகே கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவர்

மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தமிழகம் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசும். தெற்கு, மத்திய, தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும். வடக்கு அந்தமான், தெற்கு இலங்கை கடலோரப் பகுதி உள்ளிட்ட இடங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா கடலோரம், மத்திய, தெற்கு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது”. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ