ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் மலையாள மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு- மனுக்களை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!
இது தொடர்பாக, மலையாள மொழியில் பேசி காணொளியை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாடு முழுவதும் ஒற்றுமையும், சமத்துவமும் மீண்டும் உண்டாக வாழ்த்துகள். மக்கள் அனைவரையும் சமமாகப் பாவிக்கும் மத்திய அரசு அமைய வேண்டும். பரஸ்பர அன்பும், நல்லிணக்கமும் கொண்ட தேசமாக அனைவரையும் சமமாகப் பார்ப்போம்” என்று குறிப்பிட்டு, மலையாள மக்களுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.