Homeசெய்திகள்சென்னைசெறிவூட்டப்பட்ட அரிசி என்று அறியாமல் உணவில் இருந்து நீக்க வேண்டாம்: மாணவர்களுக்கு உணவுத்துறை அதிகாரிகள் விளக்கம்

செறிவூட்டப்பட்ட அரிசி என்று அறியாமல் உணவில் இருந்து நீக்க வேண்டாம்: மாணவர்களுக்கு உணவுத்துறை அதிகாரிகள் விளக்கம்

-

- Advertisement -

செறிவூட்டப்பட்ட அரிசி என்று அறியாமல் உணவில் இருந்து நீக்க வேண்டாம்: மாணவர்களுக்கு உணவுத்துறை அதிகாரிகள் விளக்கம்

மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து விழிப்புணர்வு இல்லா அவலநிலை

செறிவூட்டப்பட்ட அரிசி இரும்புச்சத்து, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 போன்ற சத்துக்களை கொண்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு இரத்த சோகை போன்ற தீவிர பிரச்சனையை எதிர்த்து போராடுகிறது.

செறிவூட்டப்பட்ட அரிசி என்று அறியாமல் உணவில் இருந்து நீக்க வேண்டாம்: மாணவர்களுக்கு உணவுத்துறை அதிகாரிகள் விளக்கம்

இந்த அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி-12 ஆகிய ஊட்டச்சத்துகள் செயற்கையாக ஏற்றப்படும். வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட பல நுண்ணூட்டச் சத்துப்பொருள்கள் கொண்ட செயற்கையான செறிவூட்டும் கலவை (பிரிமிக்ஸ்) இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த வேதிப்பொருள் கலவையும், மாவாக்கப்பட்ட அரிசியும் சேர்க்கப்படும். பிறகு, இந்த மாவு அரிசி வடிவில் மீண்டும் இயந்திரங்களில் வார்த்தெடுக்கப்படுகிறது. சாதாரண அரிசியுடன் 100:1 என்ற விகிதத்தில் இந்தச் செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் கலக்கப்படுகின்றன. இந்த அரிசியை எளிதில் கண்டறியலாம். வித்தியாசம் வெண்ணிறமாக இருக்கும். நீரில் மிதக்கும்.

 

ஆவடி அடுத்து பட்டாபிராம் பகுதியில் இந்திய உணவு கழகம் உள்ளது. இந்த உணவு கிடங்கில் இன்று பட்டாபிராம் சத்திரை அரசு பள்ளியில் பயிலும் 10ஆம் வகுப்பு 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உணவு கழகத்தின் அதிகாரிகளால் உணவு கிடங்கின் செயல்பாடுகள், பாதுகாப்பு மற்றும் தானியங்களின் சேகரிப்பு, பதப்படுத்துதல் தன்மை குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

உணவு கொள்கையின் பின்வரும் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக ,உணவு கழகத்தின் சட்டம் 1964 -ன் கீழ் இந்திய உணவு கழகம் உருவாக்கப்பட்டது. பட்டாபிராம் பகுதி உணவு கிடங்கில் புழுங்கல் அரிசி, பச்சரிசி மற்றும் கோதுமை ஆகியவை சேமித்து வைக்கப்படுகின்றன.

செறிவூட்டப்பட்ட அரிசி என்று அறியாமல் உணவில் இருந்து நீக்க வேண்டாம்: மாணவர்களுக்கு உணவுத்துறை அதிகாரிகள் விளக்கம்

அரிசி, கோதுமை பற்றாகுறையை தீர்க்க தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா, ஆந்திர மாநிலம் ஆகிய இடங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்காக பயனுள்ள ஊக்க விலை அளித்து நெல் கொள்முதல் பெறப்படுகிறது. பொது விநியோக முறைக்காக நாடு முழுவதும் உணவு தானியங்கள் விநியோகிக்கப்படுகிறது. தேசிய உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உணவு தானியங்களின் செயல்பாட்டு மற்றும் இடையக இருப்புகளின் அளவை பராமரித்து வருகிறது.

இந்த உணவு கிடங்கிற்கு 7 வழித்தடங்களில் ரயில் மூலம் தானியங்கள் கொண்டு வரப்படுகின்றன. கொண்டு வரப்பட்ட தானியங்களை லாரிகள் மூலம் நகர்த்தப்பட்டு இங்கு உள்ள 66 கிடங்குகளில் சேமிக்கப்படுகின்றது. சேமிப்பதற்காக வைக்கப்பட்ட உணவு தானியங்களை பூச்சு தொற்று ஏற்படாமல் இருக்க டெல்டா மெத்ரின் மருந்து தெளித்தல், அலுமினியம் பாஸ்படைட்டுடன் சரக்குகளை புகைத்தல் போன்றவற்றை தரம்சரிபார்ப்பு அதிகாரிகளால் அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது.

செறிவூட்டப்பட்ட அரிசி என்று அறியாமல் உணவில் இருந்து நீக்க வேண்டாம்: மாணவர்களுக்கு உணவுத்துறை அதிகாரிகள் விளக்கம்

மேலும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI),
இந்திய உணவு கழகம் (FCI)-யில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி கோதுமையின் தரம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை NABL அங்கீகாரத்துடன் மாதிரி சோதனைக்கு உட்படுகிறது. PDS/TNCSCக்கு வழங்கப்படுவதற்கு முன் பங்குகள் FSSAI விவரக்குறிப்பை கடந்து செல்கிறது. மாவட்ட அலுவலகத்தால் சென்னையின் கீழ் உள்ள டிப்போ பங்குகளின் பூச்சி பாதிப்பை திறமையாக கட்டுப்படுத்துகிறது.

கோவிட் 19 காலத்தில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களுக்கும் உணவு தானியங்களின் விநியோகம் மற்றும் நகர்த்தலை FCI உறுதி செய்துள்ளது. FCI சட்டத்தின் கீழ் (PHH, AAY, DBT) அனைத்து பயனாளிகளுக்கும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மானிய விலையில் ரேஷன் வழங்கியது.

செறிவூட்டப்பட்ட அரிசி என்று அறியாமல் உணவில் இருந்து நீக்க வேண்டாம்: மாணவர்களுக்கு உணவுத்துறை அதிகாரிகள் விளக்கம்

மேலும் FCI, பாதுகாப்பு ஊழியர்களுக்கு உணவுப் தானியங்களை வழங்குகிறது. கொரோனா காலத்தில் FCI ஊழியர்கள், அதிகாரிகள் கொள்முதல், இயக்கம், விநியோகம் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் தடையின்றி செய்து 2021-2022 நிதியாண்டில் மொத்தம் 329.90 LMT உணவு தானியங்கள் வழங்கப்பட்டன.

2021-22ல் சோதனை அடிப்படையில் வலுவூட்டப்பட்ட அரிசி விநியோகம் தொடங்கப்பட்டு, அரிசி அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துக்களான இரும்புச்சத்து, வைட்டமின் பி12 ஆகியவற்றால் செறிவூட்டப்பட்டுள்ளது. ஃபோலின் அமிலம், தாதுக்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையை சமாளிக்க உதவும்படி தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) படி வமைக்கப்பட்டுள்ளது. இந்திய உணவு கழகம் பல்வேறு திட்டங்களின் கீழ் FRK அரிசியை மட்டுமே சேமித்து விநியோகம் செய்துகிறது.

விநியோகங்களின் விவரங்கள்

  Total Issued (in MTs)
Scheme2021-20222022-2023
NFSA4393063032
PMGKAY127496120151
MDM26835922
WBNP81544973
Defence840540
Total183103194618

 

 

MUST READ