(L choco+cough syrup)-எனும் புதுவித போதை பொருளை இளைஞர்களிடம் விற்பனை.
ஆவடி காவல் ஆணையரகம் அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி C.தனம்மாள் அவர்களுக்கு, இளைஞர்கள் மத்தியில் புதுவித போதை பொருளை விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படையினருடன் நேற்று 02/11/2023 இரவு 11.40 மணிக்கு அம்பத்தூர் அயப்பாக்கம் மெயின் ரோடு,ஐ.சி.எப் காலனி, பஸ் ஸ்டாப் அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த
அசோகன் . R ஆ/வ 38 த/பெ ரங்கசாமி, எண். 46 B, கங்கை தெரு,
ஐ.சி.எப் காலனி, அம்பத்தூர், சென்னை 53. என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் கள்ளத்தானமாக 100 ml அளவு கொண்ட
L Choco + Cough Syrup வாங்கி வந்து அம்பத்தூர் அயப்பாக்கம் பகுதியில் இருக்கும் இளைஞர்களிடம் விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் அதிக விலைக்கு விற்பதற்க்காக 150 பாட்டில்களை சட்டத்திற்கு
புறம்பாக வைத்திருந்த குற்றத்திற்காக அசோகனை போலிசார் கைது செய்தனர்,போதைப் பொருட்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.பின்பு அம்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி
குற்றவாளியை புழல் சிறையில் அடைத்தனர்.