
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாகப் பார்ப்போம்!
அமீரின் மாயவலை…. தள்ளிப்போன டீசர் ரிலீஸ்…. புதிய தேதி அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை காரணமாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (டிச.09) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் இன்று சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அனுமதி இல்லை என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கனமழையால், தூத்துக்குடி, திருச்செந்தூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.09) விடுமுறை அளித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், கனமழை காரணமாக, நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் ‘கங்குவா’- வில் நடிப்பதை உறுதி செய்த….’அனிமல்’ பட வில்லன்!
நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அனுமதி இல்லை என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.