
நம்பியவர்கள் துரோகம் செய்ததே விஜயகாந்திற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படக் காரணம் என்று தே.மு.க.தி. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
லாரி- பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து- 2 பேர் உயிரிழப்பு!
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “பெண்கள் அரசியலில் இருப்பதே சவால் தான். அரசியலில் பெண்கள் சவால்களை சந்தித்ததற்கு ஜெயலலிதான் எடுத்துக்காட்டு. 2011- ஆம் ஆண்டு வரை அரசியலில் தனித்தே கோலோச்சியது தே.மு.தி.க.
நம்பியவர்கள் துரோகம் செய்ததே விஜயகாந்திற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படக் காரணம். விஜயகாந்தின் வழிகாட்டுதலின்படி தான் தே.மு.தி.க. எப்போதும் செயல்பட்டு வரும். விஜயகாந்த்தை திருமணம் செய்துக் கொண்ட நாள் முதல், தொண்டர்களுக்கு அண்ணியாக மட்டுமல்லாமல், அன்னையாகவும் இருந்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.