Homeசெய்திகள்தமிழ்நாடுஆட்டம், பாட்டம் என புத்தாண்டைக் கொண்டாடிய மக்கள்!

ஆட்டம், பாட்டம் என புத்தாண்டைக் கொண்டாடிய மக்கள்!

-

 

ஆட்டம், பாட்டம் என புத்தாண்டைக் கொண்டாடிய மக்கள்!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கேக் வெட்டியும், பட்டாசுகளை வெடித்தும் புத்தாண்டை ஆரவாரத்துடன் பொதுமக்கள் கொண்டாடினர். சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது.

பாலியல் புகாரில் சிக்கிய விஜய் ஆபீஸ் கணக்காளர்…..கைதானதால் பரபரப்பு!

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நள்ளிரவு 12.00 மணிக்கு முன்பு திரண்ட பொதுமக்கள், வழக்கமான உற்சாகத்துடன் புத்தாண்டைக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆட்டம், பாட்டம் என மெரினா கடற்கரையே திருவிழா கோலம் பூண்டுள்ளது.

ஒருவருக்கொருவர் புத்தாண்டு தின வாழ்த்துகளைத் தெரிவித்தும், பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதேபோல், பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதிக்கு கூட்டம், கூட்டமாக வந்த பொதுமக்கள் புத்தாண்டைக் கொண்டாடினர். அன்பைப் பரிமாறிக் கொண்டும், 2024- ஆம் ஆண்டு அனைவருக்கும் நன்மைத் தர வேண்டும் என்றும் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விஷாலின் ‘ரத்னம்’ பட முதல் பாடல் வெளியீடு!

சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டை மக்கள் கொண்டாடினர். சென்னை தியாகராயர் நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பாடலுக்கு நடனமாடியும், புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

MUST READ