Homeசெய்திகள்சினிமாதிறமையை நிரூபிக்க போராடுகிறோம்... நடிகர் சாந்தனு உருக்கம்....

திறமையை நிரூபிக்க போராடுகிறோம்… நடிகர் சாந்தனு உருக்கம்….

-

திறமையை நிரூபிக்க ஒவ்வொரு படத்தின் மூலமாகவும் போராடி வருவதாக, நடிகர் சாந்தனு பாக்யராஜ் உருக்கமாக பேசியிருக்கிறார்.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சாந்தனு. இவர் கோலிவுட்டின் முன்னணி இயக்குநரும், நடிகருமான பாக்யராஜின் மகன் ஆவார். குழந்தை நட்சத்திரமாக திரைக்கு அறிமுகமான அவர், 2008-ம் ஆண்டு வெளியான சக்கரக்கட்டி படத்தில் நாயகனாக நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகைகளின் கவனத்தை ஈர்த்தார் சாந்தனு பாக்யராஜ். தொடர்ந்து, சித்து பிளஸ்டூ, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைபேசி, கதை திரைக்கதை வசனம், வாய்மை ஆகிய திரைப்படங்களில் சாந்தனு நடித்தார்.

சக்கரக்கட்டி படத்திற்கு பிறகு அவர் நடித்த எந்த திரைப்படமும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இறுதியாக ராவணக் கோட்டம் படத்தில் நடித்திருந்தார். தற்போது சாந்தனு மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ப்ளூ ஸ்டார். பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜெயக்குமார் இப்படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், கோவையில் ரசிகர்கள் மத்தியில் பேசிய சாந்தனு, ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி, தன்னைப் போன்று வெற்றியை நிரூபிக்க போராடுபவர்களுக்கு தேவையான ஒன்று. இப்படம் வெளியான ஒரு வாரத்திலேயே பெரிய ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி, இதேபோல வளரும் கலைஞர்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று உருக்கமாக பேசினார்.

MUST READ