படம் வெளியான நாள் முதலே அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்று வரும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம், வசூலையும் வாரிக்குவித்து வருகிறது.
குறுகிய வட்டத்தில் பயணித்துக் கொண்டிருந்த மோலிவுட் எனும் மலையாள திரையுலகில் இன்று வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடிக்கின்றன. அண்மைக் காலங்களால, மலையாளத்தில் வெளியாகும் படங்கள் மலையாள ரசிகர்கள் மட்டுமன்றி தமிழ் மற்றும் பிற மொழி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் அண்மையில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். இத்திரைப்படம் கடந்த வாரம் வௌியானது. இயக்குநர் சிதம்பரம் இயக்கிய இத்திரைப்படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர், உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் மலையாளத்தில் வௌியானாலும், தமிழ் மொழி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் உள்பட பல பிரபலங்கள் இப்படத்தை பார்த்து படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி வருகின்றனர். கேரளாவிலிருந்து கொடைக்கானலுக்கு செல்லும் நண்பர்களுக்கு ஏற்படும் சம்பவங்கள், ஒருவருக்காக நண்பர்கள் இறங்கிச் செல்லும் நிகழ்வுகள் என மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் பாராட்டை பெற்று வருகிறது.
இதுவரை பாராட்டை குவித்து வந்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம், தற்போது வசூலையும் குவித்து வருகிறது. கேரளாவில் மட்டுமன்றி தமிழகத்திலும் இத்திரைப்படம் வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது. வெளியான இரண்டு வாரத்தில் இத்திரைப்படம் சுமார் 50 கோடி ரூபாய் வசூல் ஈட்டி உள்ளது. இதுவரை தமிழகத்தில் எந்த மலையாள திரைப்படமும் செய்யாத சாதனையை மஞ்சும்மல் திரைப்படம் சாதித்துள்ளது.