நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். ஆனால் இவர் தமிழகத்தில் மட்டுமில்லாமல் கேரளாவிலும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். இதற்கு அடையாளமாக நேற்று கோட் படப்பிடிப்பிற்காக சென்ற விஜயை காண வந்த ரசிகர்கள் கூட்டம் தான். விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ரஷ்யா போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக படம் குழு திருவனந்தபுரம் சென்றுள்ளது. அங்கு படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஒன்பது வருடங்கள் கழித்து கேரளா ரசிகர்களை சந்தித்தார் விஜய். அப்போது விஜய்யின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்திலேயே பகல் முழுவதும் அவருக்காக காத்திருந்து, விஜய் வந்ததும் ஆரவாரம் எழுப்பி மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.
Unforgettable lifetime moment 🔥#ThalapathyVijayStormHitsKerala #Thalapathy @actorvijay na♥️ pic.twitter.com/XqHw8I1a8g
— Jagadish (@Jagadishbliss) March 19, 2024
பின்னர் படையெடுத்து வந்த ரசிகர்களின் அன்பால் விஜயின் கார் ஒரு இன்ச் கூட நகர முடியாமல் இருந்த நிலையில் அந்தக் கார் நிறுத்தப்பட்டு சேதமடைந்தது. அது மட்டும் இல்லாமல் விஜயை கண்ட கேரளா ரசிகர்கள் விஜய் தங்கும் விடுதிவரையிலும் சென்று அவரை வழி அனுப்பினர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.