நெல்லையில் மர்மமான முறையில் உயிரிழந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தன்சிங் எழுதிய மற்றொரு கடிதம் வெளியாகியுள்ளது.
நாளை 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!
காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தனசிங், உவரி அருகே கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் அவரது உடலை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். உடல் கண்டெடுக்கப்பட்டப் பகுதியை காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், ஜெயக்குமார் தனசிங் எழுதிய மற்றொரு கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “அன்பு மருமகன் ஜெயபாலுக்கு என 4 பக்க கடிதத்தை எழுதியுள்ளார்” காலஞ்சென்ற காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங். அந்த கடிதத்தில், “எனக்கு 16 நபர்கள் லட்சக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்களை குடும்பத்தினர் யாரும் பழிவாக வேண்டாம். சட்டம் தன் கடமையைச் செய்யும்; மகளின் திருமணத்தை அனைவரும் சிறப்பாக நடத்திக் கொடுத்தீர்கள்; என் அன்பு உங்கள் மீது எப்போதும் உண்டு. மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் நடந்துக் கொண்டால் என்னை மன்னிக்கவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“ஜெயக்குமார் மரணத்தில் சந்தேகங்கள் உள்ளன”- செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. பேட்டி!
ஜெயக்குமார் தனசிங்கின் உடலுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மட்டுமின்றி, கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.