Homeசெய்திகள்விளையாட்டுபிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது லக்னோ அணி!

பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது லக்னோ அணி!

-

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 63 லீக் போட்டிகள் நடந்துள்ளன. நேற்று 64வது லீக் போட்டி நடைபெற்றது. டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 64வது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து டெல்லி அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜாக் பிராஸர் மெகர்க் ரன் ஏதுமின்றியும் அபிஷேக் போரெல் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சாய் ஹொப் 38 ரன்களிலும் ரிஷப் பண்ட் 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடியாக விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 25 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 208 ரன்கள் குவித்தது.

பின்னர் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் 5 ரன்களிலும் குயிண்டன் டிகாக் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 5 ரன்களிலும் தீபக் ஹீடா ஆட்டமிழந்தனர். அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 61 ரன்கள் எடுத்தார் .இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 189 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் தோல்வியடைந்த லக்னோ அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. டெல்லி அணியில் ஆட்டநாயகனாக 3 விக்கெட்டுகள் கைப்பற்றிய இஷாந்த் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

MUST READ