Homeசெய்திகள்விளையாட்டுசென்னை அணிக்கு 219 ரன்கள் இலக்கு!

சென்னை அணிக்கு 219 ரன்கள் இலக்கு!

-

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி முதலாவது பேட்டிங்கில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 218 ரன்கள் குவித்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 67 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 68வது லீக் போட்டி நடைபெற்றது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 68வது லீக் போட்டியில் பாப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து பெங்களூரு அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி 47 ரன்களிலும் பாப் டூ பிளசிஸ் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரஜத் படிதார் 41 ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் எதிர்த்து ஆடிய கேமரூன் 38 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 218 ரன்கள் குவித்தது. பின்னர் 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சென்னை அணி இரண்டாவது பேட்டிங் விளையாடவுள்ளது.

MUST READ