Homeசெய்திகள்தமிழ்நாடுஊடகங்கள் வாயிலாக பிரதமர் மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் - செல்வப்பெருந்தகை விமர்சனம்!

ஊடகங்கள் வாயிலாக பிரதமர் மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் – செல்வப்பெருந்தகை விமர்சனம்!

-

தமிழகத்தில் மோடிக்கு எதிராக கண்டனம் வலுக்கிறது. தமிழர்களை இழிவாக பேசுவதா? செல்வப் பெருந்தகை கண்டனம்.

ஊடகங்கள் வாயிலாக பிரதமர் மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், மே 30 முதல் ஜூன் 1 வரை திரு.நரேந்திர மோடி அவர்கள் கன்னியாகுமரியில் தியானம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளி வருகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது.வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடகங்கள் வாயிலாக திரு.மோடி அவர்கள் மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் நாளை கடிதம் கொடுக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் மாண்புமிகு நீதிமன்றத்தையும் அணுகுவோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ