Homeசெய்திகள்சினிமாசூதுகவ்வும் நாடும் நாட்டு மக்களும்... என்ன நடக்கும் பாடல் வெளியீடு...

சூதுகவ்வும் நாடும் நாட்டு மக்களும்… என்ன நடக்கும் பாடல் வெளியீடு…

-

- Advertisement -
மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் சூதுகவ்வும்2 நாடும் நாட்டு மக்களும் படத்திலிருந்து என்ன நடக்கும் எனத் தொடங்கும் பாடல் வெளியாகி உள்ளது.

நலன் குமாராசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் சூது கவ்வும். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், சஞ்சிதா ஷெட்டி, கருணாகரன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை திருக்குமரன் நிறுவனம் தயாரித்திருந்தது. இத்திரைப்படம் நகைச்சுவையான கதைக்களத்தில் அமைந்திருக்கும்.

முற்றிலும் கலகலப்பான தோணியில் எடுக்கப்பட்ட சூது கவ்வும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அதுமட்டுமன்றி விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தில் அது முக்கிய மைல்கல்லாகவும் அமைந்தது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
சூதுகவ்வும் 2 நாடும், நாட்டு மக்களும் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை தயாரித்த திருக்குமரன் நிறுவனமே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது. மிர்ச்சி சிவா இப்படத்தில் நாயகனாக நடிக்க, கருணாகரன், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எம்.எஸ்.அர்ஜூன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாகக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளது.

MUST READ