Homeசெய்திகள்தமிழ்நாடுசெட்டில்மென்ட் ஆவணம் பதியமறுத்த பதிவாளர் ஆஜராக ஆணை

செட்டில்மென்ட் ஆவணம் பதியமறுத்த பதிவாளர் ஆஜராக ஆணை

-

- Advertisement -

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி செட்டில்மென்ட் ஆவணத்தை பதிவு செய்ய மறுத்த ஆவடி சார் பதிவாளர் நேரில் ஆஜராக வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செட்டில்மென்ட் ஆவணம் பதியமறுத்த பதிவாளர் ஆஜராக ஆணை

சென்னை சூளையைச் சேர்ந்த சுகந்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் சென்னை ஆவடியில் தான் வாங்கிய பாகம் பிரிக்கப்படாத நிலத்தை தனது கணவர் நாராயணன் பெயருக்கு செட்டில்மெண்ட் வழங்குவதற்காக ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதியன்று ஆவணங்களை தாக்கல் செய்ததாகவும் அப்போது சில காரணங்களை கூறி பத்திரப்பதிவு செய்ய ஆவடி சார் பதிவாளர் மறுத்துவிட்டார் என்றும், எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

செட்டில்மென்ட் ஆவணம் பதியமறுத்த பதிவாளர் ஆஜராக ஆணை

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சுகந்தி சார்பில் வழக்கறிஞர் அண்ணாமலை ஆஜராகி ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டியும் பத்திரப்பதிவை சார்பதிவாளர் மறுத்து விட்டதாக வாதிட்டார்.

மீண்டும் இபிஎஸ் அணிக்கு திரும்பும் வைத்திலிங்கம்? – ஓபிஎஸ் ஷாக்…! (apcnewstamil.com)

இதனை அடுத்து இந்த வழக்கில் வரும் 19 ஆம் தேதி ஆவடி சார்பதிவாளர் நேரில் ஆஜராக வேண்டுமென நீதிபதி சதீஷ் குமார் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

MUST READ