Homeசெய்திகள்அரசியல்வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் - ஜெகன் மோகன் ரெட்டி

வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் – ஜெகன் மோகன் ரெட்டி

-

- Advertisement -

ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதில் வளர்ந்த நாடுகளில் உள்ளது போன்று வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் - ஜெகன் மோகன் ரெட்டி

2019 ஆண்டு 151 இடங்களில் ஜெகன் மோகன் வெற்றி பெற்றபோது மின்னனு வாக்கு இந்திரம் தான் சிறப்பு என பேசிய வீடியோவை எடுத்து தெலுங்கு தேச கட்சி பதில் விமர்சனம் செய்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. ஒய்.எஸ்.பி. 11 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 164 சட்டமன்றத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளான தெலுங்குதேசம், ஜனசேனா, பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்து சந்திரபாபு முதல்வராக பொறுப்பேற்றார்.

வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் - ஜெகன் மோகன் ரெட்டி

தேர்தல் தோல்விக்கு பிறகு, பல ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மின்னனு வாக்கு இயந்திரம் செயல்பாடு குறித்து சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெகனின் ட்வீட் படி நீதி கிடைத்தது என்று இல்லை ஜனநாயக முறைப்படி நீதி கிடைத்ததா என்று தெரிய வேண்டும். உலகெங்கிலும் வளர்ந்த ஒவ்வொரு ஜனநாயக நாடுகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக காகித வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக காகித வாக்குச்சீட்டுகளை பயன்படுத்த வேண்டும் என்று ஜெகன் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த ஜெகன் மோகன் ரெட்டியின் ட்வீட்டுக்கு தெலுங்கு தேசம் கட்சியும் அதற்கு ஏற்ப பதிலடி கொடுத்துள்ளது. கடந்த தேர்தலின் போது, ​​ஜெகன் மோகன் ரெட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து தெரிவித்த கருத்துகள் அடங்கிய வீடியோவை அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளனர். அதில் 151 இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைக்கும் போது மின்னனு வாக்குப்பதிவு இயர்ந்திரம் அருமையாக வேலை செய்ததாக ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.

வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் - ஜெகன் மோகன் ரெட்டி

இப்போது 11 இடங்கள் கிடைத்த போது ​​இயந்திரத்தில் குளறுபடிகள் நடப்பதாக கூறுவது நல்லதல்ல. ஜெகன் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. ஜெகன் மோகன் ஆந்திராவின் எலான் மஸ்க் போல பேசுகிறார். வெற்றி பெற்றால் மின்னனு இயந்திரம் நல்லது தோற்றால் சரியில்லை என்பதா? 2019 தேர்தலில் ஜெகன் வெற்றி பெற்றபோது, ​​ஈவிஎம்கள் குறித்து ஜெகன் கூறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஜெகன் தன்னைப் புகழ்வதை விட்டுவிட்டு எங்கு தவறு நடந்தது மக்கள் ஏன் புறகணித்தார்கள் என்று ஆலோசிக்க தொடங்க வேண்டும் என்று பதிவு செய்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டி பேசிய வீடியோவில் 80 சதவீதம் மக்கள் நேரடியாக வாக்குப்பதிவு செய்து வாக்கு இயந்திரத்தில் வாக்குப்பதிவுக்கு பிறகு வி.வி.பேட்டில் தாங்கள் யாருக்கு ஓட்டு போட்டமோ அவர்களுக்கு பதிவாகியதா என பார்த்து அதன் பிறகு வெளியே வந்தனர்.

அதிமுக பிஜேபியின் B-Team ஆக செயல்படுகிறது – செல்வப் பெருந்தகை விமர்சனம் (apcnewstamil.com)

எங்கேயாவது வாக்குப்பதிவுக்கும் வி.வி.பேட்டில் காண்பிக்கப்பட்ட சின்னமும் மாறி இருந்தால் அப்போதே பொதுமக்கள் புகார் அளித்து இருப்பார்கள். ஆனால் அவ்வாறு எந்த இடத்திலும் புகார் வரவில்லை. மேலும் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு அந்தந்த கட்சி ஏஜென்ட்கள் முன்னிலையில் 50 வாக்குகள் மாதிரி வாக்குப்பதிவு செய்யப்படும் அவ்வாறு செய்யப்பட்ட பிறகு வாக்குப்பதிவுக்கும் வி.வி பேட்டில் காண்பிக்கும் சின்னத்திற்கும் சரியாக உள்ளது என்பதை ஏஜென்ட்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட பிறகு கையெழுத்திட்டு தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்கிய பின்னர் பொதுமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறது.

ரேஷன் கடைகளில் தடையின்றி துவரம் பருப்பு, பாமாயில் (apcnewstamil.com)

எனவே வாக்கு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் ஜனநாயக முறைப்படி நடைபெறுகிறது. வெற்றி பெற்றால் மின்னணு இயந்திரம் சரியாக இருப்பதாகவும் தோல்வி அடைந்தால் மின்னணு இயந்திரத்தில் குளறுபடி இருப்பதாக சந்திரபாபு கூறுகிறார் என ஜெகன்மோகன் ரெட்டி பேசிய இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

MUST READ