Homeசெய்திகள்சினிமாநடிகை அனுஷ்கா அரிய வகை நோயால் பாதிப்பு... மீண்டும் வைரலாகும் செய்தி...

நடிகை அனுஷ்கா அரிய வகை நோயால் பாதிப்பு… மீண்டும் வைரலாகும் செய்தி…

-

- Advertisement -
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. இரண்டு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவரது நடிப்பில் வௌியான அருந்ததி திரைப்படம், அனுஷ்காவின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இதைத் தொடர்ந்து விஜய், சூர்யா, கார்த்தி, ரஜினி, என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் இணைந்து நடித்துள்ளார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்துள்ளார். இதுதவிர, வரலாற்று திரைப்படங்கள் என்றாலே அதில் அனுஷ்கா தான் நிச்சயமாக கதாநாயகியாக இருப்பார்.

அனுஷ்கா நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி. மகேஷ்பாபு இதனை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து மலையாளத்தில் அவர் அறிமுகமாக இருக்கிறார். ஹோம் படத்தின் இயக்குநர் ரோஜின் தாமஸ் இயக்கும் கதனர் படத்தில் அனுஷ்கா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் அவர் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் நடிகை அனுஷ்கா அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட செய்தி தற்போது இணையத்தில் மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அவர் பேட்டி ஒன்றில் தனக்கு அரிய வகை வியாதி உள்ளதாகவும், எனக்கு சிரிப்பு வந்துவிட்டால் சுமார் 20 நிமிடங்களுக்கு அடக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார். மேலும், பல நாட்களில் தன்னால் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். அண்மைக் காலமாக நடிகர் நடிகைகள் பலர் தங்களுக்கு இருக்கும் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளை பேட்டிகளில் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ