Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி விவகாரம் - முதலமைச்சர் தீவிர ஆலோசனை

கள்ளக்குறிச்சி விவகாரம் – முதலமைச்சர் தீவிர ஆலோசனை

-

- Advertisement -

முதலமைச்சர் இரங்கல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து 37 பேர் உயிரிழந்ததன் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன் தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. இதில் சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நெஞ்சு எரிச்சல், கண் எரிச்சல், வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக
வந்தனர். நேற்று காலையில் இருந்து சிகிச்சைக்காக 60-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 19 பேரும், சேலம் மருத்துவமனையில் 8 பேரும், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் 4 பேரும் புதுச்சேரி ஜிப்மரில் 3 பேரும் உயிரிழந்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு 10 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். இதில் ஆலோசனை கூட்டத்தில் ஆலோசனை கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள், டிஜிபி, உளவுத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் ஆலோசனையில் பங்கேற்றனர்.

MUST READ