நேற்று மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்து அட்டூழியம் செய்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்றுள்ளனர். அந்த நேரம் அந்த நேரம் பெரிய ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் திடீரென ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளையும் சுற்றிவளைத்து அவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர். இதுகுறித்து இன்று கரை திரும்பிய மீனவர்கள் தரப்பில் கூறப்பட்டதாவது, இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் கடலில் சரிவர மீன்பிடி தொழிலில் ஈடுபடாமல் கரை திரும்பினோம். இதனால், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என இவ்வாறு மீனவர்கள் தரப்பில் கூறினர்.