Homeசெய்திகள்தமிழ்நாடு“கர்நாடகா அரசு தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று சொன்னாலும், மழை பெய்தால் தண்ணீர் தானக வந்துவிடும்...

“கர்நாடகா அரசு தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று சொன்னாலும், மழை பெய்தால் தண்ணீர் தானக வந்துவிடும் – அமைச்சர் துரைமுருகன்

-

- Advertisement -

“கர்நாடகா அரசு தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று சொன்னாலும், மழை பெய்தால் தண்ணீர் தானக வந்துவிடும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “கர்நாடகா அரசு தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று சொன்னாலும், மழை பெய்தால் தண்ணீர் வந்துதான் ஆக வேண்டும். நீண்ட நெடிய காவிரி பிரச்சனையை என்னால் முடிந்த அளவுக்கு கையாண்டு வருகிறேன். நமக்கு இருக்கும் உரிமையை நாம் கேட்கிறோம். கர்நாடகாவிற்கு உள்ள உரிமையை அவர்கள் கேட்கிறார்கள். 8,000 கனஅடி தண்ணீர் தரப்படும் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறுகிறார். கர்நாடகா அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளது. மேட்டூர் அணைக்கு தற்போது 4,047 கனஅடி தான் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

காவிரி பிரச்சினை தொடர்பாக முதல்வர் என்னிடம் ஆலோசனை நடத்தினார். காவிரி தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டமா அல்லது கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதுவதா என முதலமைச்சர் முடிவெடுப்பார்” என இவ்வாறு பேசினார்.

 

MUST READ