HomeBreaking Newsமெரினாவில் மிரட்டல்... கள்ளக்காதல் ஜோடியை லாட்ஜில் தட்டித் தூக்கிய போலீசார்!

மெரினாவில் மிரட்டல்… கள்ளக்காதல் ஜோடியை லாட்ஜில் தட்டித் தூக்கிய போலீசார்!

-

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில், நள்ளிரவில் எடுக்க கூறிய ரோந்து போலீசாரிடம் மதுபோதையில் இருந்த ஜோடி, காவல்துறையினரை இழிவாக பேசி மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

சென்னை பட்டினம்பாக்கம் லூப்சாலையில் நள்ளிரவில் காவலர்களுடன் தகராறில் ஈடுபட்ட தம்பதி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவி வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் பொறுத்தவரை காமராஜர் சாலையில் இருந்து அடையாறு நோக்கி செல்வதற்காக மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக லூப்சாலையில் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர்.

இதனால் இரு புறங்களில் வாகன போக்குவரத்து ஏற்படாத வண்ணம் இரவு நேரங்களிலும் காவலர்கள் பணியமர்த்தபட்டு வாகனங்களை அங்கு நிறுத்தாமல் இருப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இரவு 12 மணிக்கு மேல் அதிகளவில் கடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் வருவதால் காவலர்கள் அங்கு வாகனங்களை நிறுத்தக்கூடாது என்ற அறிவுறுத்தலை வழங்கி வருகின்றனர். அதனடிப்படையில் நேற்று நள்ளிரவு சந்திரமோகன்- தனலட்சுமி ஆகியோர் மது போதையில் வாகனத்தை ஓட்டி வந்துள்ளனர்.

அவர்களை அங்கிருந்து காரை அப்புறப்படுத்துமாறு காவலர்கள் கூறியுள்ளனர். அதற்கு காவலர்களை தகாத வார்த்தைகளால் பேசியும், என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று ஏளனமாக பேசி அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர் காவலர்களை உருவகேலியும் செய்துள்ளார். இதனை காவலர்கள் உடனடியாக வீடியோ எடுத்துள்ளனர். காவலர்கள் அவர்களை வீடியோ எடுத்ததற்காக காரை விட்டு ஏற்றுவதற்காகவும் முயற்சி செய்துள்ளார்.

இந்த நிலையில், போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய வேளச்சேரியை சேர்ந்த சந்திரமோகன், அவருடன் இருந்த மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்பது தெரிய வந்தது.

சந்திரமோகன் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருவதும், தனலட்சுமி அவரது தோழி என்பதும் தெரிய வந்தது. கார் நம்பரை வைத்து போலீசார் விசாரணை செய்து சந்திரமோகன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது சந்திரமோகன் அங்கு இல்லை என்பதை அவரது மனைவி மூலம் தெரிந்து கொண்டுள்ளனர்.

அப்போது சந்திரமோகனிம் செல்போன் நம்பரை வாங்கிய போலீசார் அந்த எண் மூலம் சந்திரமோகன் வேளச்சேரி லாட்ஜ் ஒன்றில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. உடன் தனலட்சுமியும் இருந்துள்ளார். இதன் மூலம் இவர்கள் இருவரும் கள்ளக்காதல் ஜோடி என்பதும் தெரிய வந்துள்ளது.

அவர்கள் இருவரயும் கைது செய்த்ய் மைலாப்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ