Homeசெய்திகள்மது போதையில் பிரியாணி கடையில் தகராறு:இளைஞர் வெட்டி கொலை:

மது போதையில் பிரியாணி கடையில் தகராறு:இளைஞர் வெட்டி கொலை:

-

மது போதையில் பிரியாணி கடையில் தகராறு இளைஞர் வெட்டி கொலை:

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட மண்ணூர்பேட்டை பகுதியில் உள்ள மதுபான கடை அருகில் உள்ள பிரியாணி கடையில் கொரட்டூர் ரெட்டி தெருவை சேர்ந்த பாலா(எ)பாலாஜி பிரியாணி வாங்க சென்றதாக கூறபடுகிறது.

பாலா(எ)பாலாஜி
பாலா(எ)பாலாஜி

அப்போது அதே கடையில் அவ்வழியாக பிரியாணி வாங்கி வந்த அயனாவரத்தை சேர்ந்த நெப்போலியன், சங்கர் பாய், அம்பத்தூர் ஐசிஎப் காலணியை சேர்ந்த மண்டை மகேஷ் ஆகிய மூன்று பேர் மீதும் பாலாஜி என்பவர் மோதியதாக கூறப்படுகிறது. அந்த மோதலின் போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

மது போதையில் வந்த மூன்று பேரும் அயனாவரம், அம்பத்தூர் தொழிற்பேட்டை போன்ற பகுதிகளில் செல்போன் திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள்.

இந்நிலையில் பாலாவிடம் வாய் தகராறு ஏற்பட்டு, சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறிய நிலையில் மூன்று  நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலாவை தலையில் சரமாரியாக வெட்டி விட்டு, தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் ஆய்வாளர் ஜெய் கிருஷ்ணன், உதவி ஆணையர் கிரி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பாலாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவர் செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

பின்னர்  இது குறித்து வழக்கு பதிவு செய்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலிசார் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நெப்போலியன், சங்கர் பாய், மண்டை மகேஷ் ஆகிய கொலை குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

அம்பத்தூரில் பிரியாணி கடையில் சாதாரண வாய் தகராறு ஏற்பட்டு கொலை செய்யும் அளவிற்கு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ