ஆவடியில் டாக்டர் அகர்வால் கண் மருத்தவமனையில் லிப்ட்டுக்குள் சிக்கிய 8 பேரை போராடி மீட்டனர்.
ஆவடி காமராஜர் நகர் பிராதன சாலையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இயங்கி வருகிறது. அதில் நோயாளிகள் முதல் தளத்தில் இருந்து கீழ் தளத்திற்கு இறங்கும் போது லிப்ட்டு பழுதாகி பாதியில் நின்றுவிட்டது.
லிப்ட்டுக்குள் ஐந்து பெண்கள் மூன்று ஆண்கள் என மொத்தம் 8 பேரும் இரண்டு மணி நேரமாக லிப்ட்டில் சிக்கி தவித்தனர்.
தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி தீயணைப்பு துறையினர் லிப்ட்டு கதவை உடைத்து 8 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர். இந்த சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.