Homeசெய்திகள்ஆவடிஆவடியில் சிறுமியை காதலிக்க கூறி மிரட்டிய இளைஞர் கைது

ஆவடியில் சிறுமியை காதலிக்க கூறி மிரட்டிய இளைஞர் கைது

-

ஆவடி அருகே சிறுமியை காதலிக்க கூறி மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி பிருந்தாவன் நகரில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 15 வயதில் மகள் உள்ளார். இவர் ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமி தனது தோழியுடன் நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ஒரு இளைஞர் அவரது கையை பிடித்து இழுத்து காதலிக்க சொல்லி மிரட்டி முட்புதருக்கு இழுத்துச் சென்று உள்ளார். இது குறித்து, அவர் பெற்றோரிடம் கூறி அழுது புலம்பி உள்ளார். இதையடுத்து பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

காவல் ஆய்வாளர் சுகுணா தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டவர் அம்பத்தூர், ஒரக்கடத்தைச் சேர்ந்த தினேஷ் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தலைமறைவாக இருந்த தினேஷை கைது செய்தனர்.பின்னர் போலீசார் அவரை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

MUST READ